தெலுங்கானாவில் ஈரான் நாட்டின் சார்பில் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. ஹைதராபாத்தில் இன்றுடன் முடிவடையும் இந்த உணவுத் திருவிழாவில் ஈரான் நாட்டின் சைவ, அசைவ உணவு ரகங்கள் காண வருவோரின் நாவில் நீர் ஊறச் செய்வதுடன் மணமும் மூக்கைத் துளைக்கிறது.
தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் சுவைக்காக மட்டுமல்லாமல் சந்தோஷத்துக்காகவும் சாப்பிடும் உணவு, நிறைய பேருக்கு பிடித்தமானது பிரியாணி. பெருநகரங்களிலெல்லாம் தெருவுக்கு நிச்சயமாக ஒரு பிரியாணி கடையையாவது நாம் பார்த்துவிட முடியும். சென்னையில் மட்டும் 40 ஆயிரம் சிறிய மற்றும் பெரிய பிரியாணி கடைகள் உள்ளன. ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலையில் மட்டும் 40 பிரியாணி கடைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டை விடவும், பிரியாணிக்கு ஃபேமஸானது ஹைதராபாத் தான். அதனாலேயே ‘ஹைதராபாத் பிரியாணி’ என்ற பெயரிலேயே கடைகள் தொடங்கப்படுவதுண்டு. அப்படி பிரியாணிக்கு பெயர் போன ஹைதராபாத் இருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் பிரியாணி சார்ந்து ஓர் மாபெரும் உணவுத்திருவிழா நடந்துள்ளது.
தொடர்புடைய செய்தி: சென்னை: ஏழைகளுக்கு பிரியாணி வழங்கும் பேராசிரியர்கள், மாணவர்கள்
ஏராளமான உணவு வகைகள் இங்கு இருந்தபோதிலும், பிரியாணிதான் கண்கவர் வகையிலும் சுவைமிக்க வகையிலும் அமைந்திருக்கிறது. கெபாப், பிரியாணி ரகங்கள், சைவ உணவுகள் என ஈரான் தூதரகத்தின் சார்பில் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் மணக்க மணக்க சமைத்து சாப்பிடத் தூண்டி வருகின்றனர்.
Loading More post
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்