முல்லை பெரியாறு அணையின் நீர் அளவு அபாய கட்டத்தில் இல்லாதபோது இந்த விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியமென்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ஜோய் ஜோசப் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், அணையின் பாதுகாப்பு, பராமரிப்பை கேரளாவிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு, ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைப்பதை கேரள அரசு உறுதி செய்ய உத்தரவிடவும், முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 136 அடியாக இருக்கிறது, 141 அடிக்கு உயர்ந்தாலும் பாதுகாப்பானதே என்றே ஆய்வுகள் கூறுவதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்போது மழை குறைந்ததால் அணை நீர் மட்டம் குறித்து விசாரிக்கத் தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் மேற்கொண்டது. மேலும், அணை தீவிர கண்காணிப்பில் உள்ளதால், நீர் அளவில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை எனவும், முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுவது கவலை அளிக்கிறது என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
முல்லை பெரியாறு வழக்கில் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், முல்லை பெரியாறு அணையின் நீர் அளவு அபாய கட்டத்தில் இல்லாதபோது இந்த விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியமென்ன என்று கேள்வி எழுப்பியதுடன், வழக்கை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.
Loading More post
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!