தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றபின் முதல் முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமரை சந்தித்தார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆளுநர் மாளிகை, மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் பிரதமருடன் தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து ஆளுநர் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்குமென பிரதமர் உறுதியளித்ததாக கூறப்பட்டுள்ளது.