பிரதமர் மோடியை சந்தித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரதமர் மோடியை சந்தித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
பிரதமர் மோடியை சந்தித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநிலத்தின் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
 
தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றபின் முதல் முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமரை சந்தித்தார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆளுநர் மாளிகை, மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் பிரதமருடன் தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து ஆளுநர் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்குமென பிரதமர் உறுதியளித்ததாக கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com