கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை, சிபிசிஐடி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த கோவிந்தராசு கடந்த 19ஆம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜ், தொழிற்சாலை ஊழியர்கள் கந்தவேல், அல்லாபிச்சை, வினோத், சுந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
அவர்களில் எம்.பி.ரமேஷை தவிர, மற்ற ஐவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அனுமதி கோரியது. கடலூர் மாவட்ட கூடுதல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கியது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் பணிக்கன்குப்பத்திலுள்ள முந்திரி ஆலைக்கு அழைத்து ல்லப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, கடலூர் எம்.பி. ரமேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, கடலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனைப்படிக்க...தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு கூடுதல் தளர்வுகள் என்னென்ன? – விரிவான விவரங்கள்
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!