அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவக் குழுவினர் மரபணு ரீதியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பரிசோதனை முயற்சியாக மனித உடலுக்கு மாற்றம் செய்து சாதனை படைத்துள்ளனர். முதன்முறையாக பன்றி ஒன்றின் சிறுநீரகம், மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் எந்தவித எதிர்ப்பையும் ஆற்றவில்லை என இந்த சோதனையை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது அடுத்த கட்ட சோதனையில் வெற்றி பெற்றால் மனித உறுப்புகளின் பற்றாக்குறையை போக்குவதற்கு இந்த சோதனை நிச்சயம் உதவும் எனவும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சிகிச்சை மூளை செயல்பாடு செயலிழந்துள்ள நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பன்றியின் சிறுநீரகத்தை நோயாளியின் ரத்த நாளங்களில் இணைத்து மூன்று நாட்களுக்கு இணைத்து சோதித்துப் பார்த்துள்ளனர் மருத்துவர்கள். அதுவும் அந்த சிறுநீரகத்தை உடலுக்கு வெளியிலேயே வைத்து சோதனை செய்துள்ளனர் மருத்துவர்கள். அதன் மூலம் அதன் செயல்பாட்டை மருத்துவர்கள் கவனித்துள்ளனர்.
இந்த பரிசோதனையை தலைமை தாங்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர், மருத்துவர் ராபர்ட் மாண்ட்கோமெரி “உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பிறகு சிறுநீரகத்தின் செயல்பாடு வழக்கமானதாகவே இருந்தது” என தெரிவித்துள்ளார்.
மருத்துவ உலகின் இந்த பரிசோதனை புதியதொரு புரட்சியாக பார்க்கப்படுகிறது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!