கேரளாவில் மழை சற்றே குறைந்திருந்தாலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கேரளாவில் இதுவரை இந்த கன மழைக்கு 23 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதில், நிலசரிவில் சிக்கி மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி, கோட்டயம் மாவட்டத்தின் கொக்கயாறு, பூவஞ்சி, மாக்கோச்சி, பிலாபள்ளி, காவாலி, கூட்டிக்கல், பகுதிகளில் நிலசரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். பூவந்தி என்னும் இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் உட்பட 7 பேர்; உயிரிழந்துள்ளனர். மண்ணுக்குள் புதைந்த உடல்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளூர் தீயணைப்புத் துறை மற்றும் போலீசார் உதவியுடன் மீட்டுள்ளனர்.
இந்நிலையில், நாளையும், நாளை மறுநாளும் கொல்லம், இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, காசர்கோடு, வயநாடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய 11 மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுத்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. இதர மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதோடு வரும் 24ம் தேதி வரை கேரளாவில் பரவலாக கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்