ஐபிஎல் 2021ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டியை வென்று கோப்பையை 4வது முறையாக கைப்பற்றியுள்ள நிலையில், அந்த அணியின் நிர்வாக குழு சார்பில் ஐபிஎல் கோப்பையை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் வைத்து பூஜை செய்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் தலைவர் ரூபா குருநாத், திருப்பதி தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஐபிஎல் கோப்பை ஏழுமலை வெங்கடாசலபதி முன் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீனிவாசன்.
வெங்கடாசலபதி முன் ஐபிஎல் கோப்பையை வைப்பதில் பெருமை அடைகிறேன். எங்கள் நிறுவனம் திறக்கப்பட்டு 75-வது வருடத்தில் கோப்பையை கைப்பற்றியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை வாங்க முடியாத நிலையில் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்ற முடியுமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் எம்.எஸ்.தோனி நிச்சயம் சென்னை அணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். தற்போது அதே போல நடந்துள்ளது. உலக கோப்பை போட்டி முடிந்ததும் தோனி சென்னை வருவார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. வெற்றி கோப்பையை முதல்வரிடம் தோனி கொடுக்க உள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார். வரும் ஐபிஎல் ஏலத்தில் தோனி இடம் பெறுவாரா என்கிற கேள்விக்கு சி.எஸ்.கே இல்லாமல் எம்.எஸ் தோனி கிடையாது. எம்.எஸ் தோனி இல்லாமல் சி.எஸ்.கே கிடையாது என்றார்.
ஐபிஎல் ஏலத்தில் யார் யாரை தக்க வைப்போம் என்பதை பிசிசிஐ விதிமுறையை வைத்து அப்போது முடிவு செய்வோம் என்றார். டிஎன்பிஎல் குறித்த கேள்விக்கு, திறமையுள்ள வீரர்கள் டி.என்.பி.எல் மூலமாக அடையாளம் காணப்படுகிறார்கள். இது இளம் தமிழக வீரர்களை உருவாக்குவதாக தெரிவித்தார் சீனிவாசன்.
-பால வெற்றிவேல்
Loading More post
விடுதலையானார் பேரறிவாளன் - சிறப்பான தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்!
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்