இந்தியாவில் ஒரேநாளில் 13,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் ஒரேநாளில் 13,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் ஒரேநாளில் 13,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13,596 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,596 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 7,555பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,40,81,315 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 166 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,52,290 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 19,582 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,34,39,331 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,89,694 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 97,79,47,783 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com