ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்களை குவிக்கும் வீரர்களுக்கு ஆரஞ்சு நிற தொப்பியை கொடுத்து கவுரவப்படுத்துவது வழக்கம். தொடர் முழுவதுமே பல்வேறு வீரர்களிடம் மியூசிக்கல் சேர் போல இடம் மாறிக் கொண்டே இருக்கும் இந்த ஆரஞ்சு நிற தொப்பி. இந்த முறை டெல்லி அணியின் தவான், பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளசிஸ் என நால்வரிடமும் இந்த ஆரஞ்சு கேப் கைமாறிக் கொண்டே இருந்தது.
தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி இறுதிப் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் ருதுராஜ் 32 ரன்களை சேர்த்து 635 ரன்கள் உடன் சீசனை நிறைவு செய்துள்ளார். ஒரு சதம் நான்கு அரை சதம் என 16 இன்னிங்ஸ் விளையாடி இந்த ரன்களை ருதுராஜ் சேர்த்துள்ளார்.
கே.எல்.ராகுல் 626 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில் அவரை பின்னுத்தள்ளிவிட்டார் கெய்க்வாட். இப்போதைக்கு அவரது ரன்களை முந்துவதற்கான ஒரே வீரராக மற்றொரு சென்னை வீரர் டூப்ளசிஸ் உள்ளார். டூப்ளசிஸ் 600 ரன்களை கடந்துவிட்ட நிலையில் அவருக்கு இன்னும் 30 ரன்களே தேவையாக உள்ளது.
Loading More post
‘பிரதமர் ரணில் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்கக் கூடாது’ - கஜேந்திரகுமார் எம்பி
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
’சூர்யா 41’ கைவிடப்படுகிறதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூர்யாவின் அப்டேட்!
சட்டவிரோத விசா வழக்கு - மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை
மீண்டும் மூடுவிழா காண்கிறது சாண்ட்ரோ
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!