சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையால் வேளச்சேரியின் சில பகுதிகளில் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்கு ஆளாகினர். தண்ணீர் வடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
சென்னையின் தாழ்வான பகுதிகளில் ஒன்றான வேளச்சேரியில் சிறிது நேரம் கனமழை பெய்தாலே தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுவும் டான்சி நகர் பகுதியில் மழை நீர் வடிய வசதியில்லாதால் நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து விடுவதால் தொடர்ந்து இன்னல்களை சந்தித்துவருவதாக மக்கள் கூறுகின்றனர்.
மழைநீர் தேங்குவது குறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டான்சி நகரில் வசித்து வரும் நிலையில் சிறிய மழைக்கே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை எப்போது மாறும் என்பதே அவர்களின நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!