மும்பையில் நடைபெற்ற தஹி-ஹண்டி விழாவில் உரியடிக்கும் நிகழ்ச்சிகளின் போது இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மகராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற தஹி-ஹண்டி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒருவர் மேல் ஒருவர் நின்று உரியடிக்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், இரண்டு வெவ்வேறு இடங்களில் இருவர் உயிரிழந்தனர்.
பால்கர் பகுதியில் ரோஹன் கினி என்பவர் உரியடித்த பின்னர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதேபோல் அய்ரோலி என்ற இடத்தில் பள்ளி ஒன்றில் உரியடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்ள வந்த ஜெயேஷ் என்பவர் மின்வயர் ஒன்றின் மேல் கால் வைத்ததில் தூக்கிவீசப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேபோல் மும்பையில் பல்வேறு கொண்டாட்டங்களின் போது 117 பேர் காயமடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?