நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருவேறு விபத்துகளில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மேல்சிகிச்சைக்காக அருகிலிருந்த ஈரோடு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 10 மணிக்கு மேல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோழிக்கால் - நத்தம் சாலையில் உள்ள தனியார் நூற்பு மில் ஒன்றுக்கு களங்கானி, ராசிபுரம் பகுதியிலிருந்து சிலர் வேன் ஒன்றில் வந்துகொண்டிருந்துள்ளனர். வழியில் திம்மராவுத்தன்பட்டி என்ற இடத்தில் வேன் திரும்பும்போது மழை ஈரத்தில் வேன் கவிழ்ந்துள்ளது. இதில் 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 17 பேரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கை கால் முறிவு மற்றும் தலை காயம் அடைந்த 10 க்கும் மேற்பட்டவர்களை ஈரோடு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர். சாதாரண காயமடைந்த நபர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி: நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டிய கனமழை: சாலைகளை சூழ்ந்த மழைநீர்
இதேபோன்று திருச்செங்கோடு கரட்டுப்பாளையம் என்ற இடத்தில் வேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்த கார் ஒன்று நாய் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது, சென்டர் மீடியனில் மோதி குமாரபாளையத்தை சேர்ந்த சரவணன் நவீன் ராஜ் ஓட்டுனர் ராஜசேகர் ஆகியோர் காயமடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த ராஜசேகர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இருவேறு விபத்துக்களில் 20க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் காயமடைந்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மனோஜ்கண்ணா
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!