பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், சதுரங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரு. பழனியப்பன் ஜன்னல் ஓரம் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். தற்போது எழுத்தாளர் சந்திரா இயக்கி வரும் கள்ளன் படத்தில் கரு.பழனியப்பன் நடித்து வருகிறார். அடுத்து அவர் மாதவன் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கரு.பழனியப்பன் இயக்க உள்ள அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அருள்நிதி அறிவித்துள்ளார். அதில் "எனது அடுத்த படத்தை அஷெஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அரசியல் பற்றி பேசும் இந்த படத்தை கரு.பழனியப்பன் இயக்க இருக்கிறார். அடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
கரு.பழனியப்பன் தனது கருத்துக்களை வெளிப்படையாகவும், நேரடியாகவும் கூறி வருகிறார். அரசியல், தற்போதைய நிலவரங்களை அவர் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இது அரசியல் படம் என அருள்நிதி அறிவித்துள்ளதால், தற்கால அரசியல் நிலவரங்களை மையப்படுத்தி இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருள்நிதி திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!