ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 46-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த மும்பை அணி முதலில் பேட் செய்தது.
அந்த அணிக்காக கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் டிகாக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இரண்டாவது ஓவரில் வெறும் 7 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் ஷர்மா அவுட்டானார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் இன்னிங்ஸை நிதானமாக அணுகினார்.
டிகாக் 19 ரன்களில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 33 ரன்களை குவித்து அவுட்டானார். தொடர்ந்து சவுரப் திவாரி மற்றும் பொல்லார்ட் என இருவரும் அவுட்டாகினர். 14.1 ஓவர்கள் முடிவில் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை அணி.
பின்னர் பாண்ட்யா சகோதரர்கள் இன்னிங்ஸை இறுதி பந்து வரை நகர்த்தி செல்லும் பொறுப்பை உணர்ந்து விளையாடினர். இருந்தாலும் 19-வது ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் பாண்ட்யா, 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். குல்டர் நைல் ஒரு ரன் எடுத்து அவுட்டானார்.
டெல்லி அணிக்காக அக்சர் பட்டேல் (3), ஆவேஷ் கான் (3), அஷ்வின் (1) மற்றும் நார்க்கியா (1) விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்களை எடுத்தது மும்பை. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி அணி விரட்டி வருகிறது.
Loading More post
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!