திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் 2 மகன்கள் பலியான நிலையில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. கூலி வேலை பார்த்து வரும் இவரது வீட்டுக்கு மேற்புரமாக மின்சார வயர் செல்கிறது. அதன் அருகே கம்பத்தில் துணிகளை காயப்போட இரும்பு கம்பியை கொண்டு கொடிகட்டி உள்ளார். இதனிடையே திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று காலை திருப்பதி குளித்துவிட்டு ஈரத்துண்டை வீட்டிற்கு வெளியே உள்ள இரும்பு கொடி கம்பியில் காய போட்டுள்ளார். அப்பொழுது மின்சாரம் தாக்கி திருப்பதி துடித்துள்ளார்.
இதனைப் பார்த்த அவரது மகன்கள் சந்தோஷ்குமார் (வயது15) விஜய்கணபதி (வயது 17) இருவரும் தந்தையை காப்பாற்ற சென்றுள்ளனர். அவர்களையும் மின்சாரம் தாக்கியுள்ளது. இச்சம்பவத்தை பார்த்த அருகில் உள்ள வீட்டில் வசித்துவரும் முருகன் அவரது மனைவி சூரியா 3 பேரையும் காப்பாற்ற சென்று உள்ளனர். அவர்களை மின்சாரம் தாக்கி உள்ளது. இந்நிலையில் திருப்பதி அவரது மகன்கள் சந்தோஷ்குமார், விஜய் கணபதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காப்பாற்ற சென்ற முருகன் மற்றும் அவரது மனைவி சூர்யா படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!