ஆட்சியில் இருப்பவர்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல நடந்து கொள்கின்றனர். அவர்களின் தலைக்கனத்தை இறக்கி வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது என அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக அம்மா அணி சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், ’தேர்தல் ஆணையத்தில் பொதுச்செயலாளர் சசிகலாதான் என அபிடவிட் தாக்கல் செய்தவர்கள்தான் தற்போது அவரது பதவி செல்லாது, துணைபொதுச்செயலாளர் பதவி செல்லாது என தீர்மானம் போட்டு அவசர அவசரமாக 27 பேர் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள். அது சட்டப்பட்டி குற்றம். நான் 23 ஆண்டுகளாக அம்மாவின் பின்னாலிருந்து அரசியல் கற்றவன். சோதனைகளை கடந்து வந்தவன். என்னிடமிருந்து நிதானமாகத்தான் வார்த்தைகள் வரும். ஆட்சியில் இருப்பவர்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல நடந்து கொள்கின்றனர். அவர்களின் தலைக்கனத்தை இறக்கி வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு இதே மதுரையில் ஆட்சியில் இருப்பவர்களின் சார்பில் அரசு விழாவாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதே.. அப்போது இந்த எழுச்சியை காணமுடிந்ததா? பயனாளிகள் என்ற பெயரிலே பள்ளி மாணவமாணவிகளை அழைத்து வந்திருந்தார்கள். இது கூட்டி வந்த கூட்டமா? தானாக வந்த கூட்டமா? நாங்கள் எல்லாம் அமைச்சர்களா? கட்சியின் தொண்டர்கள்’ என்றார்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'