பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
வாஷிங்டனில் பிரதமர் மோடியை துணை அதிபர் கமலா ஹாரிஸ் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இச்சந்திப்பில் பேசப்பட்டவை குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா செய்தியாளர்களிடம் விளக்கினார். மோடியுடனான சந்திப்பின் போது பாகிஸ்தான் விவகாரத்தை கமலா ஹாரிஸ் தாமாக முன்வந்து எழுப்பியதாக வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
இந்தியாவும் அமெரிக்காவும் பாதிக்கப்படுவதை தடுக்க பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என கமலா ஹாரிஸ் கூறியதாகவும் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், ஹக்கானி நெட்வொர்க் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஊக்கம் அளிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் தாமாக முன்வந்து பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!