இலங்கையில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, இலங்கையின் பிரபல நாளேடான கொலம்போ பேஜ் வெளியிட்டுள்ள செய்தியில் "இலங்கையில் உள்ள கடலோரப் பகுதியான மருதமுனை அருகேயுள்ள நிண்டவூர் பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் உரிய ஆவணங்களின்றி ரகசியமாக தங்கியுள்ளதாக கடலோரக் காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு போலீஸ் படையினருடன் அப்பகுதியை சோதனையிட்டபோது அங்குள்ள ஒரு வயல்காட்டில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பேர் பிடிபட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர்களை போலீசார் கைது செய்து சம்மந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
எல்லை கடந்து வந்து உரிய அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்ததாக அவர்கள் மூன்று பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. பிடிபட்ட மூவரும் நாற்பது வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்றும் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
Loading More post
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
கூட்டுறவு பசுமை பண்ணை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி: அமைச்சர் ஐ.பெரியசாமி
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!