உயிருடன் இருந்த குழந்தையை கொரியர் மூலம் பார்சலில் அனுப்ப முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
சீனாவில் 24 வயது பெண் தனது குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பைக்குள் வைத்து, அதை பல பிளாஸ்டிக் பைகளால் பார்சல் போல சுற்றினார். பின்னர் குழந்தை பார்சலை கொரியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று ஒரு அனாதை இல்லத்துக்கு அனுப்பும்படி கூறினார். பார்சலில் உணவு பொருள் இருப்பதாக தெரிவித்தார். அதை கையில் வாங்கிய ஊழியர், பார்சலுக்குள் இருக்கும் பொருள் அசைவதையும், குழந்தையின் அழுகுரலையும் கேட்டார்.
சந்தேகமடைந்த அவர் அந்த பார்சலை பிரித்து பார்த்தார். உள்ளே கை, கால்களை அசைத்தபடி குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். குழந்தையை மீட்ட அவர் அப்பெண் மீது போலீசில் புகார் செய்தார். சீனாவில் குழந்தையை அனாதையாக்குவது சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும். அக்குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கிடைக்கும். எனவே குழந்தையை அனாதை விடுதிக்கு அனுப்ப முயன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் குழந்தை அனாதை இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'