மாற்றுதிறனாளி குழந்தைகள் தேசிய கீதத்தின் பெருமையை அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்காக தேசிய கீதம் சைகை மொழியில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுடன், நடிகர் அமிதாப் பச்சனும் கலந்து கொண்டு பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன கண மன பாடல் இந்தியாவின் தேசியக் கீதமாக உள்ளது. இந்தப் பாடலை மாற்றுதிறனாளி குழந்தைகள் சைகை மொழியில் பாடி வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டே நேற்று வெளியிட்டார். இனி வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத குழந்தைகள் பள்ளிகளிலும், அரசு விழாக்களிலும் இந்த சைகை மொழி கீதத்தை பாடலாம். இந்த வீடியோவை கோவிந்த் நிஹாலனி என்பவர் உருவாக்கியுள்ளார். மாற்றுதிறனாளி குழந்தைகளுடன் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து பாடி உருவாகியுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்