அமைந்தகரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பாரிமுனை நோக்கி 50 வழித்தட எண் கொண்ட மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. கீழ்ப்பாக்கம் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி பேருந்து நிறுத்தம் வந்ததும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பேருந்தில் ஏறி தட்டி சத்தம் எழுப்பிக் கொண்டு சென்றனர். இதனையடுத்து நடத்துனர், பாதுகாப்பு பணியில் இருந்த டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரியிடம் கூறினார்.