சேலம் அருகே மனநலம் பாதித்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சேலம் ஆட்டையாம்பட்டி அருகே அக்கரபாளையம் பகுதியைச் சேர்ந்த தறி தொழிலாளியின் 16 வயது மகள். மனநலம் பாதித்த இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பாட்டியுடன் வீட்டின் அருகே ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், அவரிடம் ஆசை வார்த்தை கூறி வண்டியில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மல்லூர் அருகே கேட்பாரற்று நின்று கொண்டிருந்த மனநலம் பாதித்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், சிறுமியை கடத்திச் சென்ற இனாம்பைரோஜி பகுதியை சேர்ந்த கோபி (29) என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் மனநலம் பாதித்த சிறுமியை மதுபோதையில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Loading More post
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!