கொடைக்கானலில் நான்கு மாதங்களுக்குப் பிறகு பூங்காக்கள், படகு இல்லங்கள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் இன்று திறக்கப்பட்டன.
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா தொற்று பரவல் குறைந்த காரணத்தால் கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொடைக்கானல் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் சாலை போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட நிலையில், மலைப்பகுதியின் குளிர்ச்சியை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் கொஞ்சம் கொஞ்சமாக வரத்துவங்கினர். ஆனால், சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று முதல் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்யவும், பூங்காக்களில் ஓய்வு எடுத்து குழந்தைகளை மகிழ்விக்கவும், பசுமை பள்ளத்தாக்கு மற்றும் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு பகுதிகளை பார்வையிடவும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்பவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நம்பிகையோடு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!