காவிரி வழக்கில் நிபுணர்களைக் கொண்டு வாதாடுமாறு தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின்போது, தவறான சாகுபடி முறைகளால் காவிரி நீரை கர்நாடகா வீணடிப்பதாக தமிழகத் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தமிழகத் தரப்பின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், பெருமழை பொழியும் காலங்களில் மேட்டூர் உள்ளிட்ட அணைகளில் நீரை சேமித்து வைக்கும்போது அது வறட்சி காலங்களில் கை கொடுக்கும் அல்லவா என்று கேள்வி எழுப்பினர். கர்நாடகா தண்ணீர் தர இயலாத நிலையில் இருக்கும்போது சேமிக்கப்பட்ட நீரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் இவ்வழக்கில் நிபுணர்களைக் கொண்டு வாதாடுமாறு தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், ஒவ்வொரு நிபுணர்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க தலா 45 நிமிடம் வழங்கப்படும் எனக் கூறினார். நிபுணர்களின் வாதம் அறிவியல் பூர்வமானதாக இருக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'