தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. முறையான மருத்துவப் சோதனைக்குப் பின் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை இளைஞர்கள் அடக்கினர்.
தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடைபெற்றது. அதன் எதிரொலியாக ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் சட்டப்பேரவையில் சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சிவிரட்டு, எருதுவிடும் விழா உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பலத்த பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. சுமார் 500 காளைகளும் 350 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் 15 பேர் காயமடைந்தனர். இதேபோல், மதுரை மாவட்டம் மேலூர் அருகே தாமரைப்பட்டி பகுதியில் காளைகளை அவிழ்த்துவிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேது நாராயணபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சிவகங்கை சிராவயலில் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!