கொரியப் பிராந்தியத்தில் அணு ஆயுதப் போரை அமெரிக்கா தூண்டி விடுவதாக வடகொரியா குற்றம்சாட்டியிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதாரத் தடைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று வடகொரியா எச்சரித்திருக்கிறது. ஒரு நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்பட்டிருக்கும் கொடூரமான தாக்குதல் இது என்றும் அந்த நாடு கூறியிருக்கிறது.
வடகொரியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பொருளாதாரத் தடையை ஐக்கிய நாடுகள் அவை விதித்துள்ளது.
இந்த பொருளாதாரத் தடையை கொண்டுவர போடப்பட்ட தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு அவையில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. வடகொரியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத் தாது, காரீயம், கடல் உணவுகள் போன்றவற்றைக் குறிவைத்து இந்தப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் வடகொரியாவின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்படும் என ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலே தெரிவித்தார். ஏவுகணைச் சோதனைக்காக ஒரு நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளில் இதுவே மிகப்பெரியதாகும். அணு ஆயுதச் சோதனையில் ஈடுபடுவதாக வடகொரியா மீது அவ்வப்போது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில கொரியப் பிராந்தியத்தில் அமெரிக்காதான் அணு ஆயுதப் போரைத் தூண்டுகிறது என வடகொரியா குற்றம்சாட்டியிருக்கிறது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்