டோக்லாம் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் இந்திய ராணுவம் வெளியேறாவிட்டால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா-சீனா-பூட்டான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் அண்மையில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா அந்த பகுதியில் ராணுவ படைகளை குவித்தது. டோக்லாம் பகுதியில் குவித்துள்ள ராணுவத்தை இந்தியா திரும்ப பெற வேண்டும் என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும் இந்தியா தரப்பில் படைகள் வாபஸ் பெறப்படவில்லை. இதுதொடர்பாக சீனா ஏற்கனவே இந்தியாவை எச்சரித்திருந்த நிலையில், தற்போது இந்திய ராணுவம் டோக்லாம் எல்லையிலிருந்து வெளியேறாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மீண்டும் சீனா எச்சரித்துள்ளது. இதனால், இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்