கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு தீர்வு காண உதவுமாறும் மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஸ்ரேயம்ஸ் குமார், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். வளைகுடா நாடுகள் விதித்துள்ள நுழைவுக் கட்டுப்பாடுகள் மற்றும் விமான சேவைக்கு தடை காரணமாக அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக விமானப் போக்குவரத்து ரத்தானதால் ஏராளமான இந்தியர்கள் அங்கு வேலைக்கு திரும்ப முடியாத நிலையில் தவிப்பதாக ஸ்ரேயம்ஸ் குமார் தெரிவித்துள்ளார். இதனால் கேரளா போன்ற மாநிலங்களில் பெரிய அளவில் சமூக, பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஸ்ரேயம்ஸ் குமார் தன் கடிதத்தில் கூறியுள்ளார்.
இதன் பின் பேசிய எம்.பி.ஸ்ரேயம்ஸ் குமார், வளைகுடா நாடுகளிடம் பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்வதாக அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
Loading More post
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?