7 பேர் பலி; 2.5 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைப்பு - மேற்குவங்கத்தை புரட்டி எடுக்கும் மழை

7 பேர் பலி; 2.5 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைப்பு - மேற்குவங்கத்தை புரட்டி எடுக்கும் மழை
7 பேர் பலி; 2.5 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைப்பு - மேற்குவங்கத்தை புரட்டி எடுக்கும் மழை

மேற்கு வங்கத்தில் ஆறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்குவங்கத்தில் பெய்து வரும் கனமழையால், 2.5லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட ஹூக்ளி மாவட்டத்தில் ராணுவமும், விமானப்படையும் மீட்புப பணியில் ஈடுபடுத்தப்பட்டன. வழக்கத்தை விட அதிக அளவில் பெய்த மழையால் பல இடங்களில் இடுப்பளவிற்கு மழைநீர் சூழ்ந்தது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தார்பாய்கள், ஆயிரம் டன்னுக்கு அதிகமாக அரிசி, குடிநீர் பாக்கெட்டுகள் மற்றும் துணிகள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் 31 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com