தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வந்தவாசியில் 5 செமீ மழையும் திருப்பூர் மற்றும் மன்னார்குடியில் 3 செமீ மழையும் பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை தென் மாநிலங்களில் சராசரியை விட குறைந்த அளவே பெய்துள்ளது.
இதுகுறித்து வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த் கூறும்போது, சென்னை இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மழைப் பொழிவு சராசரி அளவை ஒட்டியே உள்ளது. தென் மாநிலங்களில் மழை குறைவாக பெய்துள்ளது. அணைகளில் நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சராசரியை விட 35% அதிக மழை பெய்தால் நல்லது. 35% அதிகமாக மழை பெய்தால் மட்டுமே சராசரி மழை அளவை ஈடு செய்ய முடியும் என்றார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்