ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பின்னர் முதல் ஆளாக விசாரணைக்கு ஆஜராவேன் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 25ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என 154 பேரிடம் ஆணையம் விசாரித்தது. ஆனால், ஆணையம் அமைவதற்கு காரணமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்தசூழலில், மருத்துவக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், கடந்த 27 மாதங்களாக விசாரணை நடைபெறாமல் இருக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில், நீதிமன்றத்தின் தடை நீக்கப்பட்டதும் முதல் ஆளாக விசாரணைக்கு ஆஜராவேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'