இன்றைய தினம் வானில் நிகழும் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என, இந்திய வான் இயற்பியல் ஆய்வக விஞ்ஞானி செல்வேந்திரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நேரப்படி இன்றிரவு 10 மணி ஐம்பத்து இரண்டு நிமிடங்களுக்கு நிலவின் மீது பூமியின் நிழல் விழத் தொடங்குகிறது. சந்திர கிரகணத்தின்போது தோன்றும் முழு நிலவை தென்னிந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆகஸ்ட் மாதம் 21 ம் தேதி, வட அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. மேலும் வரும் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணம், தமிழகத்தின் வழியாக கடந்து செல்லும் என இந்திய வான் இயற்பியல் ஆய்வக விஞ்ஞானி செல்வேந்திரன் கூறியுள்ளார். டிசம்பர் 26 ஆம் தேதி தோன்றும் முழு சூரிய கிரகணமானது தென் தமிழக நகரங்களான, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் வழியாக கடக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்