மகாராஷ்டிராவில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்துவருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை பெய்துவருவதால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இன்று காலை பெய்த கனமழை காரணமாக ரெய்காட் மாவட்டத்தில் மலாய் மற்றும் தலாய் கிராமங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். சதாரா மாவட்டத்தில் பெய்த கனமழையால் 8 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேரை காணவில்லை.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்ட அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, மீட்புப்பணிகளை தீவிரப்படுத்த குழுக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேவையான உதவிகள் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்