Published : 14,Jul 2021 12:37 PM
"நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்து" - நீதியரசர் ஏ.கே.ராஜன்

பெரும்பாலானவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்றே கருத்து தெரிவித்திருப்பதாக நீதியரசர் ஏ.கே. ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 10-ஆம் தேதி நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் அரசு குழு அமைத்தது. பல்வேறு தரப்பினரும் தங்களின் கருத்துகளை இந்த குழுவிற்கு அனுப்பி வைத்தனர். இதன் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட அறிக்கையை, தங்களது பரிந்துரைகளுடன் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீதியரசர் ஏ.கே. ராஜன் 165 பக்க அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கி இருப்பதாக கூறினார். நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும், 85 ஆயிரத்துக்கும் அதிகமான கருத்துகள் வந்திருப்பதாக கூறிய நீதியரசர் ஏ.கே.ராஜன் அவற்றில் பெரும்பாலானவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.