ஃபெஃப்சி தொழிலாளர்களின் பிரச்னை தொடர்பான முதற்கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஃபெஃப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃபெஃப்சி தொழிலாளர்கள் இல்லாததால் ஏராளமான படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே, ஃபெப்சி தொழிலாளர்கள், வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் திரும்புவதாக ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி நேற்று அறிவித்தார். ரஜினி உள்ளிட்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் கேட்டுக்கொண்டதின் பேரில் போராட்டம் கைவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கம்போல் இன்று படப்பிடிப்பு துவங்கியது.
இதனிடையே, ஃபெஃப்சி தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், ஃபெஃப்சி சம்மேளன நிர்வாகிகள், அரசுத் தரப்பு நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide