Published : 12,Jul 2021 10:12 AM
அவதூறு, வதந்தி பதிவுகள்: 133 கணக்குகள் மீது நடவடிக்கை- ட்விட்டர் தகவல்

அரசின் விதிமுறைகளுக்கு முரணாக பதிவிட்ட 133 கணக்குகளுக்கு உரியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடக நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில் புதிய தகவல் தொழில் நுட்ப விதிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி அவதூறு, ஆபாசம், வெறுப்புணர்வை தூண்டுதல், வதந்தி உள்ளிட்ட பதிவுகளை இட்ட 133 கணக்கு உரிமையாளர்கள் மீது கடந்த மே, ஜூன் மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.