உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் எனவும் பாஜக தலைவர் அமித்ஷா கூறினார்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமித்ஷா, கடந்த 15 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தை ஆண்ட பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதிக் கட்சியும் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஒருவர் மாநிலத்தைக் கொள்ளையடிப்பதாகவும், மற்றவர் நாட்டையே கொள்ளையடிப்பதாகவும் சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் ஆகியோரை அவர் விமர்சித்தார். உ.பி.யில் பாஜக மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும். அவ்வாறு பாஜக ஆட்சியமைக்கும் நிலையில் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்றும் அமீத்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் சமாஜ்வாதிக் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி களம் காண்கிறது. இது பாஜகவுக்கு மிகப்பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்