காஞ்சிபுரம் கன்னிக்கோவில் மேடு இருளர் இன மக்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் இன்று இரவுக்குள் அவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவர் என மதுராந்தகம் வட்டாட்சியர் கவுசல்யா உறுதி அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிகோவில்மேடு கிராமத்தில் இருளர் இன மக்களுக்காக 20 ஆண்டுகளுக்கு முன் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில்தான் 50-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்தாண்டே தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையிலுள்ளதால், புதிய கட்டடங்கள் கட்டக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு எந்த பலனும் இல்லை.
இந்நிலையில் நள்ளிரவில் தொகுப்பு வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் உறங்கிய அய்யம்மாள் என்ற மூதாட்டி இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த செய்தியை புதிய தலைமுறை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வந்தது. இதன் எதிரொலியாக காஞ்சிபுரம் கன்னிக்கோவில் மேடு இருளர் இன மக்கள் இன்று இரவுக்குள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவர் என மதுராந்தகம் வட்டாட்சியர் கவுசல்யா உறுதி அளித்துள்ளார். புதிய தலைமுறையிடம் பேசிய அவர், இருளர் இன மக்களுக்கு நிரந்தரமாக வேறு இடத்தில் வீடு கட்டித் தரப்படும் என்று தெரிவித்த அவர், பெரும்பேர் கண்டிகை என்ற இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்