தேசிய நதிநீர் சட்டத்தை திருத்த வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேசிய நதிநீர் விதிகளை மத்திய அரசு முறையாக கடைப்பிடிப்பதில்லை எனக்கூறிய தமிழக அரசு, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கிலிருந்து பின்வாங்கப்போவதில்லை எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு குறித்த இறுதி விசாரணையில் தமிழக அரசின் வாதம் இன்று தொடங்கியது. அப்போது நடுவர் மன்றத் தீர்ப்பை அமலாக்க மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன எனக் கேட்ட நீதிபதிகள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினர்.
விவாதத்தில் பேசிய தமிழகத் தரப்பு வழக்கறிஞர், காவிரி நீர் கிடைக்காததால் காவிரி பாசன பகுதியின் பரப்பளவு பெரிதும் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். நதிநீர் பங்கீடு என்பது புவியியல் அடிப்படையில் அமைய வேண்டும் என்பது சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் விதி என்றும் தமிழகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?