நீட் தேர்வு குறித்து இதுவரை 25 ஆயிரம் கடிதங்கள் மின்னஞ்சல் மூலமாக வந்திருப்பதாகவும், அதில் பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என கருத்து தெரிவித்திருப்பதாகவும் ஆய்வுக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நீட் தேர்வு குறித்து இதுவரை 25,000 கடிதங்கள் வந்துள்ளன. நீட் தேர்வு குறித்து வந்த கடிதங்களில் பெரும்பாலானோர் வேண்டாம் என கூறியுள்ளனர். ஒரு சிலர் மட்டுமே நீட் தேர்வு வேண்டுமென கூறியிருக்கிறார்கள். ஒரு சிலர் 2 ஆண்டுகளுக்கு மட்டும் நீட் தேர்வு வேண்டாமென தெரிவித்துள்ளனர்.
ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசாணை உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய முயற்சிப்போம். ஆய்வுக்குழுவிற்கு கால நீட்டிப்பு கேட்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. அனைத்து தரப்பினரின் கருத்துக்களை அறிந்தபிறகு அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்வோம். இன்னும் சில தகவல்கள் கிடைக்க வேண்டியுள்ளது. அந்த தகவல்களையும் சேர்த்து முடிவெடுப்போம். அரசு கொடுத்துள்ள குறிப்புகளுக்கு மட்டுமே அறிக்கையில் விளக்கம் கொடுக்கப்படும்” என்று கூறினார்.
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix