திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து மார்பில் கைவைத்து அழுத்தி முதலுதவி செய்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கேவி குப்பத்தைச் சேர்ந்த திலகவதி, தனது 7வயது மகன் சபரி மற்றும் சகோதரிகள் கவிதா, பாக்கியலட்சுமி ஆகியோருடன் அரியூர் சென்றுகொண்டிருந்தார். சிறுவனுக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் வருவதை அடுத்து, சிகிச்சைக்காக மூவரும் நேற்று மாலை மருத்துவமனைக்கு சென்றனர்.
மூவரும் ஆட்டோவில் சென்ற நிலையில், இரவானதால் கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் அவர்கள் தங்கினர். நள்ளிரவில் சிறுவன் சபரிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தாய் திலகவதி உள்ளிட்ட மூன்று பெண்களும் சிறுவன் சபரியின் மார்பில் கைவைத்து அழுத்தி முதலுதவி செய்ய முயன்றனர்.
இதில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான், சகோதரிகள் மூன்றுபேரையும் கைதுசெய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!