பெங்களூருவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
குஜராத்தில் அடுத்த வாரம் மாநிலங்களவை எம்பி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாரதிய ஜனதா கட்சியினர் விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சுமார் 40 பேர் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் வருமான வரித் துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். மேலும் கர்நாடக எரிசக்தித் துறை அமைச்சர் சிவக்குமார் வீட்டிலும் அவருக்கு தொடர்புடைய 39 இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதற்கிடையில் ஒரே ஒரு மாநிலங்களவை இடத்துக்காக இது போன்ற செயல்களில் பாரதிய ஜனதா அரசு ஈடுபடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கருத்து தெரிவித்துள்ளார்.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்