கொரோனா தடுப்பு பணிகளுக்காக தயாரிப்பாளர் தாணு, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார்.
தமிழகத்தின் முன்னணி தயாரிப்பாளர் தாணு, முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் அளித்துள்ளதோடு முதல்வர் மு.க ஸ்டாலினின் ஒரு மாத ஆட்சியை பாராட்டியும் கடிதம் எழுதியிருக்கிறார். ” பெருந்தொற்று காலத்தில் ஆட்சியின் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில், உங்கள் வேகமான நடையும், விவேகமான முடிவும் ஓய்வில்லா களப்பணியும் தேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளவர், 10 லட்சத்திற்கான காசோலையையும் இணைத்து அனுப்பியிருக்கிறார்.
இதற்கு முன்னதாக, கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பல துறையினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், தாணு நிவாரண நிதியை அளித்திருக்கிறார். கடைசியாக தாணு தயாரிப்பில் வெளிவந்த ‘கர்ணன்’ வெற்றி பெற்றது. தற்போது சூர்யா-வெற்றிமாறன் கூட்டணியின் ‘வாடிவாசல்’ படத்தை தயாரித்து வருகிறார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்