"இப்போதுள்ள மருந்துகளுக்கு, டெல்டா ப்ளஸ் கொரோனா திரிபு கட்டுப்படாமல் போகலாம்"- விஞ்ஞானிகள்

"இப்போதுள்ள மருந்துகளுக்கு, டெல்டா ப்ளஸ் கொரோனா திரிபு கட்டுப்படாமல் போகலாம்"- விஞ்ஞானிகள்
"இப்போதுள்ள மருந்துகளுக்கு, டெல்டா ப்ளஸ் கொரோனா திரிபு கட்டுப்படாமல் போகலாம்"- விஞ்ஞானிகள்

இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா இரண்டாவது அலைக்கு மிக முக்கியமான காரணம், டெல்டா வகை கொரோனா திரிபு. இந்தியாவில் பரவத்தொடங்கிய இந்த திரிபு, பி.1.617.2 என்று அழைக்கப்பட்டது. முன்னராக இருந்த பி.1.617 என்பதிலிருந்து பிரிந்து, இது உருவானது. இந்நிலையில், இதிலும் இப்போது பிரிவு ஏற்பட்டுள்ளது. அதை, பி.1.617.2.1 என்று சொல்கிறார்கள் அறிவியலாளர்கள். இது, டெல்டா ப்ளஸ் திரிபு என அழைக்கப்படுகிறது.

இந்த டெல்டா ப்ளஸ் திரிபு, தற்போதிருக்கும் கொரோனா மருந்துகளுக்கு கட்டுப்படாமல் போகலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள். ஜூன் 7ம் தேதி வரையில், இந்தியாவில் ஆறு பேருக்கு டெல்டா ப்ளஸ் வகை கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த வினோத் ஸ்கேரியா என்ற உயிரியல் துறை மருத்துவர் பேசும்போது, “இந்த வகை திரிபு, கேசிரிவிமாப் (Casirvimab) மற்றும் இம்டெவிமாப் (Imdevimab) ஆகிய மருந்துகளுக்கு கட்டுப்படுகிறது. ஆகவே அவற்றை அவசரகால பயன்பாட்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய மருந்து கட்டுப்பாடு வாரியம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இப்போதைக்கு இது இந்தியாவில் அதிகளவு பதிவாகவில்லை. இருந்தாலும், அதுபற்றி நாம் அதிகம் ஆராய வேண்டும்” எனக்கூறியுள்ளார். இந்த புது வகை திரிபு, ஐரோப்பா – ஆசியா – அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவலாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com