சேலத்தில் கடனுக்கான தவணை தொகையை செலுத்தாத வீடுகளுக்கே சென்று மிரட்டல் விடுக்கும் வங்கி ஊழியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா முழு முடக்கத்தால் பலர் வேலையிழந்துள்ள நிலையில் வாங்கிய கடனுக்கான தவணையை செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடன் தொகை மற்றும் வட்டியை செலுத்த வற்புறுத்தி தனியார் வங்கி ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது. கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கடன் தொகையை வசூல் செய்ய வந்த தனியார் வங்கி ஊழியர்கள் இருவர், ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அமர்ந்துகொண்டு, பணத்தை கொடுத்தால்தான் வெளியே செல்வோம் எனக் கூறி மிரட்டிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வங்கி நிறுவன மேலாளரிடம் கேட்டபோது, கடன் வசூல் செய்யக்கூடாது என எந்தவித அறிவிப்பும் வழங்கவில்லை என கூறினர். வங்கி ஊழியர்களின் வற்புறுத்தலால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள பலர், கடன் தவணையை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும், வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!