ஓசூரில் இருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து மூலப் பொருட்களை கன்டெய்னரிலிருந்து திருடிய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அக்பர் என்பவர் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அக்பர் ஏற்கனவே இரண்டு முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். கடந்த ஜனவரியில் நடந்த சம்பவத்தில் நேற்று முன்தினம் கன்டெய்னர் ஓட்டுநர் ரமேஷ் பாபு, முகமது அலி ஜின்னா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூரில் இருந்து எண்ணூர் துறைமுகம் நோக்கி கடந்த ஜனவரி மாதம் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து மூலப்பொருட்கள் வந்து கொண்டிருந்தது. பிறகு கப்பல் மூலமாக லண்டனில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நிறுவனத்தின் அதிகாரிகள் கன்டெய்னரில் சோதித்துப் பார்த்தபோது மருந்து மூலப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அந்நிறுவனத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து புகார் குறித்து மாதவரம் பால் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கன்டெய்னர் லாரி ஓட்டுனர் ரமேஷ்பாபு என்பவர் தான் கொள்ளையடித்தது தெரிந்தது. இதையடுத்து ரமேஷ்பாபுவை போலீசார் கைது செய்தனர். தற்போது இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட அக்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்