சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் சாலையோர மரங்களில் உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு வனவிலங்கு நல ஆர்வலர் விஸ்வநாதன் உணவளித்து வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். விலங்கு நல ஆர்வலரான இவர், கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் நாய், பூனை, உள்ளிட்ட விலங்குகளுக்கு தன்னால் முடிந்த உணவை வழங்கி வருகிறார்.
சீர்காழி - காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் சூரக்காடு என்னும் இடத்தில் ஏராளமான குரங்குகள் கூட்டமாக வசித்து வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அவ்வழியே கடந்து செல்லும், அந்த வாகனங்களில் செல்லும் பலரும் குரங்குகளுக்கு உணவு கொடுத்து செல்வது வழக்கம். ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் இன்றி அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான குரங்குகள் உணவின்றி தவித்து வந்தன.
இதை அறிந்த விலங்கு நல ஆர்வலர் விஸ்வநாதன் கடந்த 15 நாட்களாக தினந்தோறும் அங்கு சென்று வாழைப்பழம், தர்பூசணி, மாம்பழம் என தன்னால் முடிந்த உணவுகளை குரங்குகளுக்கு வழங்கி அவற்றின் பசியை தீர்த்து வருகிறார். மேலும் ஊரடங்கு காலத்தில் நம்மை சார்ந்து வாழும் வாயில்லாத ஜீவன்களுக்கு உணவளிக்க அனைவரும் முன்வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!