உத்தரபிரதேசத்தில் பாலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்றுவிட்டு 3 குழந்தைகளை கால்வாயில் வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் பாசேதி கிராமத்தைச் சேர்ந்தவர் பப்புகுமார். குமாருடைய மனைவி டோலி (36) கடந்த 15 நாட்களாக அவருடன் பாலுறவு வைத்துக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமார் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தனது மூன்று குழந்தைகளான சோனியா(5), வான்ஷ்(3) மற்றும் ஹர்ஷிதா(15 மாதம்) ஆகியோரை வீட்டிற்கு அருகிலிருந்த கால்வாயில் உயிருடன் எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து விவரமறிந்த கிராமத்தினர் புர்காழி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் டோலியின் உடலை கைப்பற்றியதுடன், குமாரை முசாஃபர்நகரில் கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, தனது மனைவியை கொலை செய்துவிட்டு குழந்தைகளை உயிருடன் கால்வாயில் வீசியதை ஒத்துக்கொண்டுள்ளார். கால்வாயில் வீசப்பட்ட குழந்தைகளின் உடல்கள் இதுவரை கிடைக்காததால் போலீஸார் தேடும்பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்