திருச்சி மத்திய சிறையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த 68 கைதிகளுக்கு கூடுதல் டிஜிபி சைலேந்திர பாபு சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழகத்தில் சிறையில் இருக்கும் கைதிகள் திருந்தி தங்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும், தன்னிம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்க்கொள்ளவும் அவர்கள் பாதியில் விட்ட படிப்பை தொடர வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதேபோல திருச்சி மத்திய சிறையில் உள்ள 68 கைதிகள் தாங்கள் பாதியில் விட்ட படிப்பை முடித்ததை தொடர்ந்து, அவர்களுக்கான வெற்றிச் சான்றிதழ்களை கூடுதல் டிஜிபி சைலேந்திர பாபு வழங்கினார். பின்னர் அவர் சிறைச்சாலையை ஆய்வு செய்து கைதிகளின் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள 126 சிறைச்சாலைகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகள் 8ம் வகுப்பில் இருந்து பட்டயப்படிப்பு வரை பயின்று வருவதாக தெரிவித்தார். இவர்களுக்கு கற்பிக்க 9 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிறைகளில் செல்போன் பயன்பாடு முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Loading More post
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!