தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் வியாழக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், மேலும் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன.
கடந்த வாரத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திடமிருந்து 7.96 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக் நிறுவனங்களிடமிருந்து 1.66 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளையும் தமிழக அரசு நேரடியாக வாங்கி சேமித்து வைத்துள்ளது.
இந்நிலையில், மேலும் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்துள்ளன. மொத்தம் 10.62 லட்சம் டோஸ்கள் கையிருப்பு உள்ளதால், 18 முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கடந்த 1-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், தடுப்பூசி பற்றாக்குறையால் தமிழகத்தில் அந்த திட்டம் தாமதமாக தொடங்கப்பட உள்ளது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?